பிங்க், மஞ்சள், ஊதா.. ஜிங்குச்சா ஜிங்குச்சா.. கலர் கலராக கலக்கும் இந்திய கரன்சி!
இந்திய கரன்சி நோட்டுகள் கலர் கலராக அச்சிடப்படுவது சிரிப்பை வரவழைக்கிறது.
சென்னை: இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் பிங்க், மஞ்சள், ஊதா ஆகிய கலர்களில் அச்சிடப்படுவது கேலியாக உள்ளது.
இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுக்கள் மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு அவை புழக்கத்துக்காக இந்திய ரிசர்வ் வங்கிக்கு செல்கிறது.
அங்கு வங்கி அதிகாரிகள் நோட்டுகளை சரிபார்த்துவிட்டு அவற்றை அறிமுகம் செய்து வைத்து புழக்கத்தில் விடுகின்றனர்.
பணமதிப்பிழப்பு
கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதையடுத்து பிங்க் நிறத்திலாலான ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நோட்டு ரூ.100 நோட்டை விட சிறியதாக இருந்தது.
ஜிங்குச்சா
நாட்டில் ரூபாய் நோட்டுகள் கலர் கலராக அச்சடிக்கப்படுகிறது. இது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் உள்ளாகிறது. இந்நிலையில் இன்றைய தினம் ரூ. 100 க்கான மாதிரி நோட்டை ஆர்பிஐ வெளியிட்டது.
ஜெராக்ஸ் பேப்பர்
இந்த புதிய ரூ. 100 நோட்டுகள் ஊதா நிறத்தில் இருக்கும் என்று தெரிகிறது. இதுபோன்று ஏற்கெனவே நீல நிறத்தில் ரூ. 50 நோட்டும் சந்தன நிறத்தில் ரூ 10 நோட்டும், கருப்பு நிறத்தில் ரூ. 500 நோட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெராக்ஸ் நோட்டு
இந்த நோட்டுகள் குழ்நதைகள் பள்ளி புராஜெக்ட்டுக்காக பயன்படுத்தும் போலி நோட்டுகள் போல் உள்ளன. மேலும் குறைந்த மதிப்பிலான நோட்டுகளை காட்டிலும் இவரை சிறியதாக உள்ளன. எப்படியோ கலர் ஜெராக்ஸ் நடத்தி ஏமாற்றாமல் இருந்தால் சரி.