அரக்கோணம் அருகே விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை ஹெலிகாப்டர்!
Recommended Video
சென்னை: அரக்கோணம் அருகே இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் பகுதியில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான பயிற்சி தளம் உள்ளது. இன்று காலை சேத்தக் ரக ஹெலிகாப்டரில் விமானி பயிற்சிக்காக கிளம்பினார். பயிற்சியை முடித்து தரையிறக்க முற்பட்டபோது, திடீரென ஹெலிகாப்டர் பழுதாகி விழுந்து நொறுங்கியது.
இருப்பினும் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உள்ளிட்டோர் அதிருஷ்டவசமாக தப்பினர். தொழில்நுட்ப ககோளாறு காரமமாக ஹெலிகாப்டர் பழுதடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டரில் பறந்து அதற்கென உள்ள வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது நடைமுறையில் உள்ள வழக்கம் தான். விபத்தில் ஹெலிகாப்டரின் முன்பகுதி, வால் பகுதி ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன. ஹெலிகாப்டர் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த வகை ஹெலிகாப்டர்களில் அதிகபட்சமாக மூன்று பேர்தான் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.