காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்திக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வாழ்த்து!
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்திக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்திக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்று இருக்கிறார்.அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்.
இந்தியாவில் மத வெறுப்பு அரசியலை முன்வைத்து ஆட்சி நடத்துபவர்களிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு தனது செயல்பாடுகளை அமைத்து கொள்ள வேண்டும்.மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவின் பாரம்பாரியத்தை காக்க காங்கிரஸ் முன்வர வேண்டும்.
உலக அரங்கில் இந்தியாவிற்கு களங்கத்தை ஏற்படுத்தியது பாபரி மஸ்ஜித் இடிப்பு.அன்றைய காங்கிரஸ் கட்சியின் பிரதமர் நரசிம்மராவ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட்டு முஸ்லீம்களிடம் ஒப்படைத்து களங்கத்தை போக்க வேண்டும். இவ்வாறு முஹம்மது ஷிப்லி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.