நீட் எதிர்ப்பு எதிரான மனித சங்கிலி போராட்டம்.. முஸ்லீம் லீக் பங்கேற்கும்.. கே.எம்.காதர் மொய்தீன்
நீட் தேர்வுக்கு எதிரான மனித சங்கிலியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பங்கேற்கும் என்று அதன் தேசிய தலைவர் கே.எம். காதர் மொய்தீன் தெரிவித்தார்.
சென்னை: நீட் தேர்வை கண்டித்து 27-ஆம் தேதி நடைபெற்றவுள்ள மனித சங்கிலியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் கே எம் காதர் மொய்தீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வினால் சாமானிய மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் மருத்துவம் படிப்பு என்பது எட்டாக்கனியாகிவிட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.
நீட் தேர்வுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நீட் தேர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தை திமுக நடத்துகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் கலந்து கொள்ளும் என்று அதன் தேசிய தலைவர் கே. எம். காதர் மொய்தீன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு எதிராக 27-ஆம் தேதி திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கே.எம். காதர் மொய்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.