கோவை டூ சென்னை விமானத்தில் பனிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்து மகாசபை பிரமுகர்
கோவை: கோவையிலிருந்து சென்னை சென்ற இன்டிகோ நிறுவன விமானத்தில் விமானப் பனிப் பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த மூன்று பேரில் ஒருவர் இந்து மகாசபை அமைப்பின் முக்கியப் பிரமுகர் என்று தெரிய வந்துள்ளது.
இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட விமானம் கோவையிலிருந்து சென்னைக்குக் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானப் பனிப் பெண் ஒருவரிடம், 3 பயணிகள் அத்துமீறி நடந்துள்ளனர். மூன்று பேரும் நல்ல குடிபோதையில் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் இந்து மகாசபை அமைப்பின் முக்கியப் பி்ரமுகராம்.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட பனிப்பெண் போலீஸில் புகார் கொடுக்கவே போலீஸார் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுபோல ஓடும் விமானத்தில் விமானப் பனிப் பெண்களிடம் சில்மிஷம் செய்வது இது முதல் முறையல்ல. முன்பு கேரள அமைச்சர் ஒருவர் பெண் செய்தியாளர் ஒருவரின் இடுப்பைக் கிள்ளி பெரும் சர்ச்சையில் சிக்கி பதவியையும் இழந்தார் என்பது நினைவிருக்கலாம். அது சென்னையிலிருந்து கேரளவுக்குச் சென்ற விமானத்தில் நடந்தது என்பது நி்னைவிருக்கலாம்.