திருச்சி, சென்னை, பெங்களூரு, தாய்லாந்து.. "டைரக்டா" பறக்கலாம்... விரைவில்!
திருச்சியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இண்டிகோ விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
திருச்சி: திருச்சியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இண்டிகோ விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதேபோல் திருச்சியில் இருந்து தாய்லாந்துக்கும் நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து சென்னை பெங்களூருவுக்கு திருச்சியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு புதிய விமான சேவை தொடங்குவதற்காக ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த சேவையை இண்டிகோ விமான நிறுவனம் வழங்குகிறது.
இதற்காக அந்த நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் திருச்சி வந்து விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், குடியுரிமை பயணிகளுக்கான வசதிகள், விமான ஓடுதள வசதி போன்றவற்றை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் புதிய விமான சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சியில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு நேரடி விமான சேவையினை ஏர்-ஏசியா நிறுவனத்துடன் இணைந்து தாய் ஏர்வேஸ் நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே திருச்சி விமான நிலையத்துக்கு 3 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் 8 புதிய ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் கார்கோ மற்றும் விமான நிலைய சோதனை பகுதிகளில் வைக்கப்பட உள்ளது.