For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே கட்சியின் வழக்கில் 2-ஆவது முறையாக அதிரடியாக தீர்ப்பளித்த இந்திரா பானர்ஜி!

ஒரே கட்சியின் வழக்கில் 2-ஆவது முறையாக அதிரடியாக ஒரு தீர்ப்பளித்துள்ளார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஏன் செல்லும்...நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம்- வீடியோ

    சென்னை: தகுதி நீக்க வழக்கில் 2-ஆவது முறையாக அதிரடியாக ஒரே தீர்ப்பை அதுவும் ஒரு கட்சிக்கே அளித்துள்ளார் இந்திரா பானர்ஜி.

    தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களும் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி அவர் மீது நடவடிக்கை கேட்டு அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தனர்.

    இதையடுத்து கொறடா உத்தரவை மீறியதாக 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு

    ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு

    இந்நிலையில் திமுக கொறடா சக்கரபாணி சென்னை ஹைகோர்ட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதில் கொறடா உத்தரவை மீறியதாக 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டது போல் கடந்த ஆண்டு பிப்ரவரி 18 -ஆம் தேதி எடப்பாடி அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாறி வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி வந்தது. அப்போது சபாநாயகரின் முடிவே இறுதியானது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இந்திரா பானர்ஜி தீர்ப்பு

    இந்திரா பானர்ஜி தீர்ப்பு

    18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்றார். ஆனால் மற்றொரு நீதிபதி சுந்தரோ 18 பேர் தகுதி நீக்கம் செல்லுபடியாகாது என்றார். மாறுபட்ட நீதிபதிகளின் தீர்ப்பால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதிக்கு மாறுகிறது.

    அதிரடி தீர்ப்பு

    அதிரடி தீர்ப்பு

    ஓபிஎஸ் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்த இந்திரா பானர்ஜி, இன்றும் சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். ஒரே மாதிரியான ஒரு கட்சியினரின் வழக்கில் 2-ஆவது முறையாக அதிரடி தீர்ப்பளித்துள்ளார் இந்திரா பானர்ஜி.

    English summary
    Indiara Banerjee gives verdict which supports Speaker for 2nd time in same party's issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X