பெரியபாண்டியன் கொலையில் தொடர்புடைய ஆய்வாளர் முனிசேகர் பணியிட மாற்றம்!
சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த முனிசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுடப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் முனிசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் நாதுராமை பிடிக்கச் சென்ற இடத்தில் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். பெரியபாண்டியனின் துப்பாக்கியாலேயே அவர் சுடப்பட்டதாகவும் கொள்ளையன் நாதுராம் தான் சுட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் ராஜஸ்தான் போலீசார் பெரியபாண்டியனுடன் வந்திருந்த ஆய்வாளர் முனிசேகர் தான் பெரியபாண்டியனை தவறுதலாக சுட்டுவிட்டதாக வழக்கு பதிந்துள்ளது. இது தொடர்பாக சென்னையிலும் முனிசேகர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரியபாண்டியன் கொலை சம்பவம் நடந்து 2 மாதங்களாகவும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முனிசேகர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முனிசேகர் தென்மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் மட்டுமே இடமாற்ற அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பாக எந்த காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதை தெளிவாக அறிவிக்கவில்லை.