For Quick Alerts
For Daily Alerts
Just In
"தீரன்" பெரிய பாண்டியன்!
சென்னை: 2017ம் ஆண்டின் இறுதியியல் வந்த பரபரப்பு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் படுகொலை.
சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளரான பெரியபாண்டியன் ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இவரைக் கொன்றது யார் என்பதில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
மற்றொரு புறம் வெளிமாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் காவல்துறையினருடன் அனுபவம் வாய்ந்த, பல மொழி பேசுபவர்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் பெரியபாண்டியன் படுகொலை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், ஊர் மக்களுக்காக 20 ஏக்கர்நிலத்தை அரசுப் பள்ளி அமைக்கத் தந்தவருமான பெரியபாண்டியனின் உயிரிழப்பு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமின்றி அவருடைய சொந்த கிராமத்திற்கும் ஒரு இழப்பாகவே அமைந்தது.
Comments
English summary
Chennai Maduravoual Inspector Periya Pandian's encounter was the hot topic in the end of the year 2017 and it has created so many questions and doubts over the issue.