தன் வீட்டில் வெள்ளம் புகுந்தாலும் சென்னைவாசிகளுக்காக 'தீயா வேலை செய்யும் குமாரு'!
சென்னை: நடிகர் சித்தார்த்தின் வீட்டுக்குள் மழை நீர் புகுந்துள்ளபோதிலும் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
திங்கட்கிழமையில் இருந்து பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கின்றது. புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தான் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் வீட்டிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
வீடு
வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துவிட்டது. மாடிக்கு செல்கிறோம். தமிழ்நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
|
எங்க வீடே
பாத்ரூம்கள் வெள்ளத்தில் மூழ்கின. டிரெய்னில் இருந்து நீர் வருகிறது. நான் ஒரு பிரபல நடிகர். இது என் வீடு. தமிழகத்தில் மீதமுள்ளவர்களின் நிலையை யோசித்து பாருங்கள்.
|
மீட்பு பணி
நாளை காரில் வலம் வந்து மக்களை பிக்கப் செய்து டிராப் செய்கிறோம். தற்போது உணவு, உடை ஆகியவை இரண்டாவது தான். போக்குவரத்து தான் முக்கியம். தயவு செய்து ரீட்வீட் செய்யுங்கள் #TNflood
|
கார்கள்
சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5 கார்கள் சுற்றி வருகின்றன. போக்குவரத்து பிரச்சனைகளை எனக்கும், @rj_balajiக்கும் போஸ்ட் செய்யுங்கள்.
|
உணவு
சென்னையில் உணவு பொட்டலங்களுக்கு உங்களால் ஏற்பாடு செய்ய முடிந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். நாங்கள் அவற்றை பிக்கப் செய்து வினியோகிப்போம். 50-100 உணவு பொட்டலங்களாக.
|
மழை
மீண்டும் மழை பெய்கிறது. கனக்டிவிட்டி வேறு போகிறது. மாலை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேவை. தயவு செய்து தொடர்பு கொள்ளவும் #ChennaiMicro.












Click it and Unblock the Notifications