காரைக்குடியில் இன்டராக்ட் சங்க பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா
காரைக்குடியில் இன்டராக்ட் சங்க பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று செவ்வாய்க்கிழமை இன்டராக்ட் சங்கத்தின் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இண்டராக்ட் சங்கத்தின் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் தொழில் சேவை தலைவர் ரோட்டேரியன் வி.ஆர்.முத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சிவகங்கை மாவட்ட இன்டராக்ட் சங்கத் தலைவர் ரோட்டேரியன் கே.சி.குருசாமி இன்டராக்ட் சங்க மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
காரைக்குடி ரோட்டரி கிளப் பியர்ல் சங்கமம் துணை ஆளுநர் முத்துக்குமார் ஜெசிஸ் பயிற்சியாளர் ஏ.ஆர். தேவராஜன் காரைக்குடி ரோட்டரி கிளப் பியர்ல் சங்கமம் தலைவர் நாவுக்கரசு, நலந்தா ஜம்புலிங்கம் மற்றும் காரைக்குடி ரோட்டரி கிளப் பியர்ல் சங்கமம் பட்டயத் தலைவர் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
இந்த விழாவில் டி.தரணிதரன் இன்டராக்ட் சங்க தலைவராகவும், பி.ஜெயஜேசன் இன்டராக்ட் சங்க செயலாளராகவும், எஸ்.நெவி இன்பாண்ட்ரின் இன்டராக்ட் சங்க பொருளாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் இன்டராக்ட் சங்க தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட டி.தரணிதரன், பள்ளியில் நடக்கும் விழாக்களிலும், சமூக பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக செயல்படுவதாக உறுதியேற்றுக் கொண்டார்.
மேலும், இவ்விழாவில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட இன்டராக்ட் சங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது. அதோடு பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ரூ.5000, இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமேரிக்கா வாழ் இந்தியரான செல்வன் ஜெப்ரின் அன்னராஜ் இன்டராக்ட் சங்க மாணவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.