For Daily Alerts
Just In
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
சென்னை: சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இன்றைய தினமும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு முதல்வர், துணை முதல்வர், அரசியல் கட்சியினர் என வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் அருகே உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் துணை ஆணையர் ஜெயலட்சுமி கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பெண் அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
Comments
English summary
International Women's day celebrated in Chennai Commissioner office. A.K.Viswanathan wishes the lady officers.
Story first published: Thursday, March 8, 2018, 13:50 [IST]