ஐஜி பொன் மாணிக்கவேல் உள்பட 30 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் உட்பட 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து கூடுதல் தலைமை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் சென்னை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை, வேலூருக்கு புதிய டிஐஜிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வேலூர் டிஐஜி தமிழ்ச் சந்திரன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமனம் கெய்யப்பட்டுள்ளார்.
மதுரை காவல்துறை ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காவல்துறை ஆணையராக இருந்த சைலேஸ்குமார் யாதவ் தென் மண்டல ஐஜியாக நியமனம்
புதுக்கோட்டை எஸ்பி லோகநாதன் தஞ்சாவூர் டிஐஜியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
கருணாசாகர், சந்தீப் குமார், அபய்குமார் சிங். வன்னிய பெருமாள் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.