தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம்
தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. என்.ஸ்டீபன் ஜேசுபாதம் சென்னை சி.பி.சி.ஐ.டி. விசேஷ புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கு பணியிடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் வெளியிட்டுள்ள அறிக்கை:
•டி.கல்பனா நாயக் -தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர். காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர் டி.கல்பனா நாயக். தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
•மகேந்திர குமார் ரத்தோடு -தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி. மகேந்திர குமார் ரத்தோடு, டி.ஐ.ஜியான இவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இவர் தற்போது தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
•அருண் பாலகோபாலன் - நாங்குநேரி உதவி எஸ்பி பணியாற்றிய இவர், பதவி உயர்வு பெற்று மதுரை நகர போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
•என்.ஸ்டீபன் ஜேசுபாதம் -சென்னை சி.பி.சி.ஐ.டி. விசேஷ புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் கூடுதல் எஸ்.பியாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
•பி.தங்கத்துரை -சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையர். கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்.பியாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
•ஆர்.ராமகிருஷ்ணன் - தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி கண்காணிப்பாளர். சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றி வந்தார்.
•எம்.துரை - கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி. இவர் கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றினார். தற்போது எஸ்.பி யாகாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
•ஜி.தர்மராஜன் - கோவை நகர தலைமையக துணை கமிஷனர். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியான இவர் கோவை நகர துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
•ஜெ.மகேஷ் - காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர் மதுரை நகர தலைமையக துணை போலீஸ் கமிஷனர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
•ஏ.மயில்வாகணன் - திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர். மதுரை நகர தலைமையக துணை கமிஷனராக பணியாற்றிய இவர் திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.