குஷ்பு என்ன அவ்வளவு பெரிய தலைவரா? ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீங்க? திருநாவுக்கரசர் 'டென்ஷன்'
ஏன் எப்போது பார்த்தாலும் குஷ்பு குறித்து கேள்வி கேட்கிறீர்கள் என்று திருநாவுக்கரசர் பத்திரிகையாளர் சந்திப்பில் அதிருப்தி அடைந்துள்ளார்.
சென்னை : குஷ்பு என்ன அவ்வளவு பெரிய தலைவரா ? ஏன் எப்போது பார்த்தாலும் அவரைப்பற்றியே கேள்வி கேட்கிறீர்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் கட்சியின் அமைப்புப் பொதுச்செயலாளர்கள் அசோக் கெலாட், முகுல்வாஸ்னிக் ஆகியோரோடு கட்சியை பலப்படுத்துவது குறித்து உரையாடி உள்ளோம்.
தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஆய்வு கண்டிக்கத்தக்கது. ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஒரு நல்ல பாலமாக இருந்து, மாநிலத்துக்குத் தேவையான நிதி கிடைக்க உதவி செய்ய வேண்டும்.
அதை விடுத்து அவர் ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதைக் குறைத்துக்கொள்வது ஆளுநருக்கு நல்லது. நான் தலைமையேற்ற பிறகு கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை.
குஷ்புவிற்கே ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து கேள்வி கேட்கிறார்கள். குஷ்பு என்ன அவ்வுளவு பெரிய தலைவரா? எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.