6 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி 29 ராக்கெட்
சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மற்றோர் சாதனையாக சிங்கப்பூரின் 6 செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி சி29 ராக்கெட் மூலம் இன்று மாலை 6 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் என்றுமே மைல் கல்லாக இருக்கும் ஒரு ராக்கெட் பி.எஸ்.எல்.வி.
இதன் வரிசையில், பி.எஸ்.எல்.வி சி29, 32ஆவது முறையாக சிங்கப்பூரின் 6 செயற்கை கோள்களை ஏந்தி விண்ணில் பாய்ந்து சென்று சுமார் 550 கி.மீட்டர் தூரத்திற்கு கொண்டு சேர்க்க விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்காக:
சிங்கப்பூரின் தட்ப வெப்பநிலை, சீதோஷ்ண மற்றும் வானிலையை அறிந்து கொள்வதற்காக இந்த செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் பயணம்:
ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சரியாக 6 மணிக்கு வெற்றிகரமாக புறப்பட்டுள்ள இந்த ராக்கெட் சரியாக 67 நிமிடங்களில் அதன் இலக்கில் சென்று சேர்க்கும்.
வர்த்தக ரீதியான லாபம்:
ஒரு டன் முதல் ஒன்றறை டன் வரையிலான எடையை கொண்டு செல்லும் வல்லமையை படைத்த இந்த பி.எஸ்.எல்.வி வரிசை ராக்கெட்டால் இந்தியா வர்த்தக ரீதியாகவும் லாபம் பெறுகிறது.
உலக அளவில் தயார்:
இதற்காக அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவை நோக்கி வருகிறது. விண்வெளி ஆராய்சியை தாண்டி வர்த்தக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப உலக அளவில் இன்னும் பல நாடுகளும் செயற்கைகோள்களுடன் தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.