கிறிஸ்டி நிறுவனத்தில் 5வது நாளாக ரெய்டு.. கூட்டுறவு வங்கியில் ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம்
கிருஷ்டி ஃபிரைடுகிராம் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ஐந்தாவது நாளாக சோதனை செய்து வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: கிருஷ்டி ஃபிரைடுகிராம் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ஐந்தாவது நாளாக சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்கள் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம் ஆகியுள்ளது. 5 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர் புகார் வந்துள்ளது. அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை செய்து வருகிறது கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனம். தொடர் புகார் வந்ததால் வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது..முதல் இரண்டு நாட்கள் சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரில் வருமான வரி சோதனை செய்தனர்.
அதேபோல் கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்த இடங்களில் எல்லாம் சோதனை நடந்தப்பட்டது. திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடந்தது. தற்போது 5 ஆம் நாளாக வருமானவரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு ஆண்டிப்பாளைய தலைமை அலுவலகத்தில் தற்போது சோதனை நடக்கிறது.முறைகேடாக சம்பாரிக்கப்பட்ட 10 கிலோ தங்கம், ரூ.17 கோடி பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அவர்கள் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம் ஆகியுள்ளது.
பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பியதில் அவர் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் முடிவில் வரித்துறை சோதனையை தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி கைது செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது.