For Daily Alerts
Just In
ஜெயலலிதா மறைவு.. தமிழகத்தில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு.. அரசு நிகழ்ச்சிகள் ரத்து
ஜெயலலிதா இறந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் 7 நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
அண்ணா, எம்ஜிஆரை தொடர்ந்து, தமிழகத்தில் முதல்வராக பதவி வகித்தபோதே மரணமடைந்த 3வது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார் ஜெயலலிதா. திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதையடுத்து தமிழகத்தில் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள், விழாக்கள் எதுவும் நடைபெறாது. தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
It is 7 days state mourning in Tamilnadu as CM Jayallitha is no more.
Story first published: Tuesday, December 6, 2016, 1:25 [IST]