For Quick Alerts
For Daily Alerts
Just In
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: பதற வைக்கும் பின்னணி
சென்னையில் கடந்தாண்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு ஆறு வயது சிறுமி ஹாசினி கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இது வரை இந்த வழக்கில் என்ன நடந்துள்ளது என்பது குறித்த பத்து முக்கிய தகவல்கள்:
- சென்னை ஆலந்தூரில் தன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென காணாமல் போனார். இச்சம்பவம் நடந்தது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்.
- தஷ்வந்த் என்ற பொறியாளர் ஹாசினியை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி பிறகு உடலை எரித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
- ஹாசினி குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
- தஷ்வந்த் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
- இந்நிலையில், பெற்றோருடன் சென்னையில் வசித்து வந்த தஷ்வந்த் கடந்த டிசம்பர் மாதம் அவரது தாய் சரளாவை கொலை செய்தது தெரிய வந்தது.
- நகைக்காக தன் தாயை தஷ்வந்த் கொன்றதாக காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
- இதனையடுத்து தலைமறைவான தஷ்வந்தை, தனிப்படை போலிஸார் மும்பையில் கைது செய்தனர்.
- மும்பையில் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் போலீசாரிடம் இருந்து தஷ்வந்த் தப்பியோடினார்.
- தப்பி ஓடிய அவரை மீண்டும் கைது செய்த போலீஸ், தாய் சரளாவை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைத்தது.
- இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
பிற செய்திகள்:
- கமல் அரசியல் பிரவேசம்: கருணாநிதி, ரஜினியுடன் ஒரே நாளில் சந்திப்பு
- "ஓராண்டு எடப்பாடி ஆட்சி - எம்.எல்.ஏக்களுக்கு கூவத்தூர்; மக்களுக்கு நரகம்"
- உ.பி: என்கவுண்டர்களின் இலக்கு முஸ்லிம்களும் தலித்துகளுமா?
- எஸ்.பி.ஐ முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி வரை - பதற வைக்கும் வங்கி முறைகேடுகள்
Comments
English summary
சென்னையில் கடந்த ஆண்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆறு வயது சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இதுவரை என்ன நடந்துள்ளது என்பது குறித்த பத்து முக்கிய தகவல்கள்.