சொல்ல முடியாது, இப்படியும் நடக்கலாம்!
சென்னை: ஆதி காலத்தில் எழுத்தாணியும், ஓலைச் சுவடியுமாக மனிதன் அலைந்தான். பிறகு பேனாவும், கையுமாக திரிந்தார்கள். இப்போதோ செல்போனும், டேப்ளட்டுமாக மாறிக் கிடக்கிறது உலகம்.
மனிதனின் ஆறாம் விரலால் செல்போன் மாறிப் போயுள்ள காலம் இது. காலையில் எழுந்ததுமே பேஸ்ட் பிரஷை எடுப்பதற்குப் பதில் செல்லை எடுத்து பேஸ்புக்கையும், வாட்ஸ் ஆப்பையும் பார்ப்பதே மக்கள் பலரின் தலையாய கடமையாக உள்ளது.
அதைப் பார்த்தபடியே பல வேலைகளைச் செய்வதும் பலரின் வழக்கம். என்ன வேலை செய்தாலும் கூடவே செல்லையும் நோண்டியபடி இருப்பது சிலருக்கு முக்கியமான விஷயம்.
இந்நிலையில், இப்படிப்பட்டவர்கள் சலூனுக்கு முடி வெட்டப் போனால் என்ன செய்வார்கள்... அதை வைத்து யாரோ ஒரு புண்ணியவான் சிந்தித்ததன் விளைவுதான் இந்த புகைப்படம்...
இந்தப் புகைப்படம் தற்போது வாட்ஸ் அப்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
இதைப் பார்க்கும் ஆண்கள் பலர் தாங்கள் முடிவெட்டும் சலூன்களிலும் இது போன்ற வசதி வந்து விட்டதா என விசாரிக்கத் தொடங்கி விட்டதாய் ஒரு தகவல்....