செய்யாதுரையின் செம தொடர்புகள்.. ஆடிப் போன வருமான வரித்துறை அதிகாரிகள்.. விறு விறு விசாரணை!
Recommended Video
மதுரை: காண்டிராக்டர் செய்யாதுரையின் தொடர்புகள் வருமான வரித்துறையினரே அதிர்ந்து போயுள்ளனராம். அவருடன் பல விவிவிஐபிகளின் தொடர்பு வைத்துள்ளனர். அது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறதாம்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டிதான் செய்யாதுரை தேவரின் சொந்த ஊராகும். இவரது நிறுவனம்தான் எஸ்பிகே. சாதாரண ஆட்டுத் தோல் தொழிலில் ஈடுபட்டவர் இன்று தமிழகத்தின் அத்தனை நகரங்கள் முதல் பட்டி தொட்டி வரை பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டுகள் மூலம்.
சும்மா லட்டு மாதிரி துட்டு சம்பாதித்துக் குவித்து வைத்துள்ளார் செய்யாதுரை. தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒரு காண்டிராக்டர் குறு நில மன்னர் போல இருப்பார். அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்தான் இந்த செய்யாதுரை.
பணக் குவியல்
இவரது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த அதிரடி வருமான வரித்துறை சோதனையின்போது ரூ. 174 கோடி ரொக்கம், 106 கிலோ தங்க கட்டிகள் ஆகியவை சிக்கின. மேலும் பல நூறு கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யார் யாருடன் தொடர்பு
செய்யாதுரைக்கு மிகப் பெரிய புள்ளிகளுடன் படு நெருக்கமான உறவு இருந்துள்ளது. இந்த தொடர்புகள்தான் தற்போது வருமான வரித்துறையினரின் இலக்காக உள்ளதாம். இவரிடம் ஏகப்பட்ட பினாமிகள் உள்ளனர். இவர்க் மூலமாக பணத்தை முக்கியப் புள்ளிகளுக்கு மாற்றி விடுவாராம் செய்யாதுரை.
முக்கிய அமைச்சருடன் தொடர்பு
மிக மிக முக்கியமான அமைச்சர் ஒருவருடன் செய்யாதுரைக்கு நெருக்கமான நட்பு உள்ளதாம். அவர் அடிக்கடி மதுரை வருவாராம். அங்கு செய்யாதுரையை சந்திக்காமல் திரும்பிப் போக மாட்டாராம். இந்த சந்திப்புகளின்போது பேசப்பட்ட விவகாரம் குறித்து தற்போது துருவித் துருவி விசாரணை நடந்து வருகிறதாம்.
ஐடி விசாரணைக்கு ஒத்துழைப்பு
விசாரணையால் செய்வதறியாமல் திகைத்தாலும் கூட கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கொடுத்து வருகிறாராம். கேள்விகளுக்குப் பதில் தர அவர் மறுக்கவில்லை. மாறாக ஏதாவது பதில் சொல்லி விடுகிறார். அந்த வகையில் ஒத்துழைப்பு தருகிறார் என்று வருமான வரித்துறை தரப்பு கூறுகிறது.
ரெய்டுகள் தொடரும்
செய்யாதுரையிடமிருந்து பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பல முக்கியஸ்தர்களின் வீடுகளில் அடுத்தடுத்து ரெய்டுகள் பாயும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.