பேட்டியால் ராம மோகனராவுக்கு புது சிக்கல்.. மத்திய நிதியமைச்சகத்திற்கு ஐடி அதிகாரிகள் புகார்
சென்னை: சென்னை பேட்டியால் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வருமான வரித்துறை சோதனை நடத்திய விதம் குறித்து முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகனராவ் புகார் கூறி இன்று பேட்டியளித்தார். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லிக்கு புகார் தெரிவித்துள்ளார்களாம்.
ஐடி ரெய்டுகளை விமர்சித்தது குறித்து நிதியமைச்சகத்திற்குப் புகார் போயுள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலர் வீட்டுக்குள் போய் சோதனை நடத்துவதில் தப்பில்லை என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
அதேபோல, ரெய்டு நடத்தும்போது குறிப்பிட்ட இடத்தை வாரண்ட்டில் குறிப்பிட்டால் போதுமானதே தவிர, பெயர் தேவையில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் ராம மோகனராவோ தமிழக மக்களை தூண்டும் வகையில் பேட்டியளித்துள்ளார். இது தங்கள் பணிக்கு இடைஞ்சலாக மாறும் என்று ஐடி அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளார்களாம்.