செய்யது பீடி நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு.. நெல்லை, மதுரை, சென்னையில் 40 இடங்களில் அதிரடி சோதனை
செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகள் உள்பட 40 இடங்களில் ஐ.டி. ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை: வருமானவரி முறையாக செலுத்தப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் செய்யது பீடி நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது செய்யது பீடி நிறுவனம். இதற்கு மதுரை, சென்னை போன்ற இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. செய்யது பீடி நிறுவனம் முறையாக வரிசெலுத்தவில்லை என்று கூறி இன்று நெல்லை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் 40 இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு வருமான வரிச் சோதனை தொடங்கியது. வருமான வரிச் சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில் 9 இடங்களிலும், சென்னையில் பெல்ஸ் சாலையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரிச் சோதனையின் போது பல ஆவணங்கள் கைப்பற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படும்.