மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
பொது வாழ்க்கையில் இருப்போர் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது இயல்பு என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பொது வாழ்க்கையில் இருப்போர் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது இயல்பு என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பொதுவாழ்க்கையில் இருப்போர் மீது அவதூறுகள் வரும் என்றும் பொய் வழக்குகள் புனையப்படுவதும் இயல்பு என்றும் கூறினார்.
துடிப்போடு செயல்படுபவர்கள் மீது கூடுதல் வழக்குகள் வருவது இயல்பு என்றும் அவர் தெரிவித்தார். தனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.
மேலும் சுகாதாரத்துறையில் வெளிப்படை தன்மையுடன் பணி நியமனங்கள் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறினார். காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.