2 தொகுதிகள் கேட்ட இந்திய தேசிய முஸ்லிம் லீக்- வேலூரை மட்டும் கொடுக்கும் திமுக!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளைக் கேட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போராடிப் பார்த்தது. ஆனால் கடைசியில் நெல்லை தொகுதியை மட்டும் முஸ்லிம் லீக்கிடம் கொடுக்க முன்வந்து இருக்கிறது திமுக.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகள் வேலூர் தொகுதியை ஒதுக்கும்படி கேட்டனர்.
அத்துடன் மயிலாடுதுறை, திருநெல்வேலி அல்லது திருச்சியையும் கேட்டது முஸ்லிம் லீக். பெரிய கூட்டணிக் கட்சிகள் இல்லாத நிலையில் 2 தொகுதிகள் அவசியம் என்று முஸ்லிம் லீக் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் திமுகவோ ஒரு தொகுதிதான் தர முடியும். மேலும் 2 முறை வேலூர் தொகுதியை கொடுத்து இருப்பதால் இந்த முறை ராமநாதபுரத்தை எடுத்துக் கொள்ளுமாறு திமுக கூறியது.
ஆனால் முஸ்லிம் லீக் இதை ஏற்கவில்லை. அத்துடன் திருச்சியை முஸ்லிம் லீக் கேட்டது. இப்போதுதான் மாநாடு நடத்தி திராணி காட்டியிருப்பதால் இந்த கோரிக்கையையும் திமுக நிராகரித்தது. இதனால் திண்டுக்கல் தொகுதியை எடுத்துக் கொள்ளுமாறு திமுக சொன்னது.
இதேபோல் மயிலாடுதுறையை மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதால் அதையும் தர முடியாது என்று திமுக மறுத்துவிட்டது.
வேலூரை துரைமுருகன் தனது மகனுக்காக ஒதுக்க நினைப்பதால் அதைத் தருவதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனாலும், வேலூரை எப்படியும் வாங்கிவிடுவது என்பதில் தீவிரமாக இருக்கிறது இந்திய யூனியன் முஸ்லீம் லீக். இதனால் துரைமுருகன் மகனுக்கு அரக்கோணத்தை ஒதுக்கிவிட்டு வேலூரை முஸ்லீம் லீக்குக்கு கருணாநிதி ஒதுக்கிவிடுவார் என்றே தெரிகிறது.