அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை- ஜெ.அன்பழகன் விளக்கம்
அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை என்று ஜெ. அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை என்றும் கட்டுக்கோப்பாக உள்ளனர் என்றும் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.
கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் எனது ஆதங்கத்தை என் அப்பாவிடம் வெளிப்படுத்த வந்துள்ளேன்.
கட்சியில் எனக்குத்தான் நிறைய ஆதரவாளர்கள் உள்ளனர். இப்போது எதையும் கூறமுடியாது. காலம் பதில் சொல்லும் என்று கூறி ஒரு குண்டை போட்டார் அழகிரி. இதை கூறிவிட்டு நேராக கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார் அழகிரி.
அங்கு அவர் கூறுகையில் கட்சி ரீதியிலான எனது ஆதங்கத்தை இன்னும் 3 நாட்களில் தெரிவிப்பேன் என்றார். நாளை திமுக அவசர செயற்குழு கூடவுள்ள நிலையில் அழகிரி இவ்வாறு பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இது குறித்து ஜெ.அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில் திமுகவினர் கட்டுகோப்பாக உள்ளோம். அழகிரியுடன் திமுகவினர் யாரும் தொடர்பில் இல்லை. திமுக தலைவர் கருணாநிதி இறப்பிலிருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை.
அழகிரி கட்சியில் இல்லாதது கருணாநிதி எடுத்த முடிவு. இப்போது இருப்பவர்கள் அல்ல. அழகிரி கட்சியில் இல்லாத போது அவரது கருத்துக்கு நான் எதையும் கூறமுடியாது என்றார்.