ஸ்ரீதேவியின் புன்னகை என்றும் நிலைத்திருக்கும்: ஜெ.தீபா இரங்கல்
ஸ்ரீதேவியின் புன்னகை என்றும் நிலைத்திருக்கும் என்று ஜெ.தீபா இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: துபாயில் இறந்த ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி நேற்று இரவு வரை நன்றாக இருந்தார். ஆனால் இரவு 11.30 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.
இவரது இறப்புக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், தீபா பேரவை பொதுச் செயலாளருமான ஜெ.தீபா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறுகையில், நடிகை ஸ்ரீ தேவியின் மறைவு இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பேரிழப்பாகும். இந்த துயரத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.
நடிகை ஸ்ரீ தேவியின் மறைவு இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பேரிழப்பாகும். இந்த துயரத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அவரது புன்னகை என்றும் நம் மனதில் நிலைத்திருக்கும்... அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் #ஸ்ரீதேவி #RipSridevi pic.twitter.com/nveVU9y0Mx
— J.Deepa (@JDeepaOfficial) February 25, 2018
அவரது புன்னகை என்றும் நம் மனதில் நிலைத்திருக்கும்... அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.