For Daily Alerts
Just In
சசிகலாவுக்கு எதிராக முழக்கமிட்ட தீபா ஆதரவாளர்கள் கைது.. ஆளுநர் மாளிகை முன்பு பரபரப்பு
ஆளுநர் மாளிகை முன்பு சசிகலாவுக்கு எதிராக முழக்கமிட்ட தீபா ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: ஆளுநர் மாளிகையை தீபா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். சசிகலாவுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 5 மணிக்கு சந்திக்கவுள்ளார்.
சசிகலா இரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து பதவி பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுக்கவுள்ளார். இந்நிலையில் சசிகலா பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா ஆதரவாளர்கள் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது சசிகலாவுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதைடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீபா ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
Comments
English summary
J.Deepa supporters arrested in Chennai. They were protesting against Sasikala and chanted against Sasikala.
Story first published: Thursday, February 9, 2017, 16:12 [IST]