For Daily Alerts
Just In
சிம்பு கோரிக்கை ஏற்பு.. தமிழகம் முழுக்க 10 நிமிடம் மவுனமாக நின்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு இன்று மாலை 5 மணி முதல் 10 நிமிடங்கள் தனது வீட்டு முன்பாக கை கட்டி கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் நடத்தினார். ஆங்காங்கு இதேபோல மக்களும் போராட்டத்தில் ஈடுபட அவர் அழைப்புவிடுத்தார். அதை ஏற்று சென்னை முதல் தூத்துக்குடி, கன்னியாகுமரி வரை ஆங்காங்கு மக்கள் பத்து நிமிட நேரம் தர்ணா நடத்தினர். வீதியில் திரண்டும் இதேபோன்ற மவுன போராட்டம் நடத்தினர்.
பெங்களூர், புனே, மும்பை, ஹைதராபாத், டெல்லி என தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் பல நகரங்களிலும் அலுவலகங்களில் இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டன.
@iam_str தலைவா 🙌🙌👏💪 #StandAsTamilan#UnityForJallikattu5PmJan12 #STRForJallikattu pic.twitter.com/lvv6pEeo43
— ❤ நவீன் உயிர் STR ❤ (@de7456bc26b0464) January 12, 2017
Comments
English summary
People done silence protest across the state after Simbu calls for it.