ஜல்லிக்கட்டுக்காக பகலும் இரவுமாக தொடர்ந்து கிளர்ந்தெழுந்த தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு என்பது தமிழரின் பண்பாட்டு அடையாளம்; இந்த உரிமையை மீட்க தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் எழுச்சியுடன் போராட்டத்தை இரவு பகல் பாராமல் தொடருகின்றனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு... இது தமிழரின் பண்பாட்டு அடையாளம்; இதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்; இந்த தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்; ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அவசர சட்டம் உடனே தேவை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழகத்தின் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் தன்னெழுச்சியான போராட்டத்தை தொடர்ச்சியாக இரவும் பகலும் பாராமால் நடத்தி வருகின்றனர்.
-சென்னை மெரினாவில் 16 மணிநேரமாக போராட்டம்
-மெரினாவில் செல்போன் ஜாமர்கள், போலீஸ் வாகனங்கள் குவிப்பு
-போராட்டக்காரர்களை கைது செய்ய காவல்துறை திட்டமா?
-சென்னை கொடுங்கையூரில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் கைது
-ஜல்லிக்கட்டுக்கு நடிகர் விக்ரம் ஆதரவு
-ஜல்லிக்கட்டு போராட்டம்: திரண்டு வரும் இளைஞர் படை- அலங்காநல்லூர் பஸ் சேவை நிறுத்தம்!
-கல்லூரி மாணவர்கள் போராட்டம் அறிவிப்பு
-நாளை வகுப்புக்களை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
-4 நாட்களுக்கு பிறகு நாளை பள்ளி கல்லூரிகள் திறப்பு
-வழக்கம் போல் செயல்படும்: பள்ளிக் கல்வித் துறை
-ஜல்லிக்கட்டு: கோவையில் திரை அங்குங்குகள் முன் இளைஞர்கள் போராட்டம்
-ஜல்லிக்கட்டுக்கு நடிகர் தனுஷ் ஆதரவு
-போராடும் தமிழர்களால் பெருமை-தனுஷ்
-மதுரை- அலங்காநல்லூர் இடையிலான பேருந்து சேவை நிறுத்தம்
-வெளியூர் ஆட்கள் அலங்காநல்லூர் வராமல் இருக்க போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து 2வது நாளாக இரவிலும் போராட்டம் நடைபெறுகிறது