மிக மோசமான பிரதமர் மன்மோகன் சிங்.. ஜவாஹிருல்லா பேச்சால் எழுந்தது சர்ச்சை
Recommended Video
சிதம்பரம்: இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களில் மிக மோசமான பிரதமர் மன்மோகன் சிங்தான் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை ஆதரித்து லால்பேட்டையில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. அப்போது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார்.
பல லட்சம் பேர்..மோடியின் மேற்கு வங்க பிரச்சாரத்தில் பெரும் கூட்டம்.. ஆட்களை சேர்த்தது இப்படித்தான்
அப்போது அவர் பேசுகையில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் ராஜீவ்காந்தி என்பதற்கு பதிலாக ராகுல்காந்தி என குறிப்பிட்டார்.
அது போல் இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களில் ஆக மோசமானவர் நரேந்திர மோடி என்று சொல்வதற்கு பதிலாக மன்மோகன் சிங் என கூறிவிட்டார். இதனால் கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.