திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச விரைவில் குழு: கருணாநிதியை சந்தித்த பின் ஜவாஹிருல்லா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொகுதி பங்கீடு குறித்து பேச விரைவில் குழு அமைக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினை அண்மையில் சந்தித்த ஜவாஹிருல்லா, திமுக கூட்டணியில் இணைந்து மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் எனக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் அக்கட்சி அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றது.

இந்நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை ஜவாஹிருல்லா இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச விரைவில் குழு அமைக்கப்படும் என்றார்.

திமுக கூட்டணியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளது. அத்துடன் எஸ்டிபிஐயும் திமுக அணியில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications