திருப்பூர் முன்னாள் எம்.பி. சிவசாமி டிஸ்மிஸ்: ஜெ. நடவடிக்கை
சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. திருப்பூர் சிவசாமி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருப்பூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூர் சி.சிவசாமி (முன்னாள் எம்.பி.) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சியின் உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.