ஜெயலலிதா மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.. விவேக் ஜெயராமன் அறிக்கை
ஜெயலலிதா மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவேக் ஜெயராமன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: ஜெயலலிதா மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவேக் ஜெயராமன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அவதூறு பரப்புபவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தான்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என்று அம்ருதா என்ற பெண் கூறினார். இந்த நிலையில் ஜெயா தொலைக்காட்சி சிஇஓ விவேக் ஜெயராமன் தற்போது அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் தனது அறிக்கையில் ''ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்படும்'' என்று கூறியுள்ளார். மேலும் ''ஜெயலலிதாவின் மரியாதையை போக்கும் செயல்களை யார் செய்தாலும் ஏற்க முடியாது'' என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில் ''மக்களிடையே நல்ல அடையாளத்தோடு வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவரை குறித்து தவறாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.