தேர்தல் அறிக்கையை ரிலீஸ் செய்த கையோடு இன்று ஆர்.கே.நகருக்கு விசிட் அடிக்கும் ஜெ.
சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பெருந்துறையில் வைத்து வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா இன்று தான் போட்டியிடும் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
வேன் மூலம் ஜெயலலிதா தீவிரப் பிரச்சாரம் செய்யவுள்ளார். காசிமேடு எம்.ஜி.ஆர். சிலை, பெட்ரோல் பங்க் வழியாக சென்று சூரியநாராயண செட்டித்தெரு, ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் பேசுகிறார். சூரியநாராயண செட்டித்தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அருணாசலேஸ்வரர் கோவில் தெரு, சேனியம்மன் கோவில் தெரு வழியாக சென்று மார்க்கெட் தெருவும், வ.உ.சி. சாலையும் சந்திக்கும் இடத்தில் உரையாற்றுகிறார். அதையடுத்து இளையமுதலி தெரு வழியாக சென்று வைத்தியநாதன் பாலமும், எண்ணூர் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் பேசி வாக்கு சேகரிப்பார்.
அதன் பின்னர் எண்ணூர் நெடுஞ்சாலை, ஜே.ஜே.நகர் சந்திப்பில் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மணலி சாலை எழில் நகரில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் முதல் தொகுதியாக ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்யவுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.