For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்

By Shankar
Google Oneindia Tamil News

-ஜெயகாந்தன்

எனக்கு நானே கடவுள்
எனக்கு நானே பக்தன்
என் வாழ்நாள் எல்லாம் திருநாள்
மரணம் எனக்குக் கரி நாள்

Jayakanthan's poetry

அட்சய வயிறு படைத்தீரே - ஓர்
அட்சய பாத்திரம் பார்த்தீரோ?
பிச்சை கிடைத்துப் புசித்தீரே -அந்தப்
பிச்சையிட்டவனைப் பார்த்தீரோ?
லச்சையை விட்டுச் சுகித்தீரே - என்
லாகிரிப் பொருளைப் பழிப்பீரோ?

வாழ்வதன் முன்னம்நான் செத்திருந்தேன்
செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்
சோர்வுக்கு முன்னால்நான் சுகித்திருந்தேன்
சோர்வுக்குப் பின்னாலும் சுகித்திருப்பேன்
வித்துக்கு முன்னால்நான் விளைந்திருந்தேன்
விளைவுக்குப் பின்னாலும் வித்தாவேன்
முடிவுக்கு முன்னால்நான் முதலானேன்
முடிந்தாலும் முடிவுக்கோர் முதலாவேன்
அசைவுக்கு முன்னால்நான் அணுவானேன்
அணு பிளந்தாலும் பிளவுக்குள் அசைவானேன்.

English summary
Here is a poetry from Jayakanthan Kavithagal book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X