For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசு மீதான அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ஜெயக்குமாரின் அடடே பதில்

தமிழக அரசு மீதான அமித்ஷா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அடடே பதில் கூறியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக அரசு மீதான அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ஜெயக்குமார் பதில்-வீடியோ

    சென்னை: தமிழக அரசு மீதான அமித்ஷா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அடடே என மெச்சு கொள்ளும் அளவுக்கு ஒரு பதிலை கூறியுள்ளார்.

    2019ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் பாஜகவை வலுப்படுத்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அப்போது அவர் பேசுகையில் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    அவர் மேலும் பேசுகையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழல் நிறைந்த மாநிலமாக உள்ளது. இதை மாற்ற வேண்டும். ஓட்டுக்கு நோட்டு என்ற பழக்கத்தை மாற்ற வேண்டும்.

    ஆட்சி அமைக்கும்

    ஆட்சி அமைக்கும்

    குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும். எப்படியும் 2019-இல் பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார். தமிழகம் மீது இத்தகைய குற்றச்சாட்டை அமித்ஷா கூறியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பாஜகவுக்கும் உள்ளது

    பாஜகவுக்கும் உள்ளது

    இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் ஒரு மாநிலத்துக்கு அகில இந்திய தலைவர் வருவதெல்லாம் அவருடைய கட்சியை வளர்க்க வேண்டும், கட்சியை பலப்படுத்துவது என்பதெல்லாம் எல்லா தலைவர்களுக்கும் இருப்பது போல் பாஜகவுக்கும் உள்ளது. அதன் அடிப்படையில் அமித்ஷா சென்னை வந்தார்.

    சிறுநீர் பாசனம்

    சிறுநீர் பாசனம்

    அவர் நேற்றைய தினம் இந்தியில்தான் பேசியுள்ளார். இந்தி யாருக்கும் புரியாது. அதை மொழிப்பெயர்ப்பு செய்தது யாரு, எச் ராஜா. மைக்ரோ இரிகேஷன் அதாவது நுண்ணீர் பாசனம் என்று அமித்ஷா கூறியதை சிறுநீர் பாசனம் என்று எச் ராஜா மொழிபெயர்த்துள்ளார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    தமிழகம் ஊழல் மாநிலம் என்பதில் என்னை பொருத்தவரைக்கும் தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத்தான் கூறியிருப்பார். அதை எச் ராஜாதான் மாற்றி கூறியிருப்பார் என்பது எனது நம்பிக்கை. ஓட்டுக்கு நோட்டு என்ற நடைமுறையைதான் அமித்ஷா கூறியுள்ளார்.

    இரு கட்சிகளுக்கு தெரியும்

    இரு கட்சிகளுக்கு தெரியும்

    இது அதிமுகவுக்கு தெரியாது. ஓட்டுக்கு நோட்டு கொடுக்கும் ஒரே கட்சி திமுகதான். திருமங்கலம் பார்முலா. 2-ஆவது நமது டோக்கன் செல்வர், இவரும் இந்த கலையில் கெட்டிகாரர். எனவே திமுக, தினகரனின் அமமுக ஆகிய கட்சிகளுக்கு அமித்ஷா கூறியிருக்கலாம்

    English summary
    Amitshah accuses that Tamilnadu is the most corrupted state in State. Minister Jayakumar says that Amit shah would say about Tamilnadu in a good way. But the translator H.Raja might translate like this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X