For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது சசிகலாவால் இந்த ஆட்சி உருவானதா?... பொய் பொய் சுத்த பொய்... அமைச்சர் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவால் இந்த ஆட்சி உருவானதாக கூறுவதெல்லாம் பொய் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதனால் அதிமுக எம்எல்ஏக்களை ஓபிஎஸ்ஸோ அல்லது எதிர்க்கட்சியினரோ விலைக்கு வாங்கிவிடுவார்கள் என பயந்த சசிகலா 122 எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைத்து வைத்தார். இதைத் தொடர்ந்து சசிகலா முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

முதல்வர்

முதல்வர்

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்து அவர் பதவியேற்றார். எம்எல்ஏக்களை சசிகலா கூவத்தூரில் தங்க வைத்ததால் மட்டுமே இந்த ஆட்சி நிலைத்தது என்று தினகரன் கூறி வந்தார்.

மகா பொய்யர்

மகா பொய்யர்

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பது பொய்யர்களின் மகா செயல். இதை தமிழகத்தின் மகா பொய்யர் (தினகரன்) கடைப்பிடிக்கிறார்.

அதிமுகவுடன் இணைந்தாக வேண்டும்

அதிமுகவுடன் இணைந்தாக வேண்டும்

அது நிச்சயம் எடுப்படாது. ஜெயலலிதா சொன்னது போல் இந்த ஆட்சி 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும். இது மக்களுக்கான அரசு. தினகரனுடன் சென்ற 18 எம்எல்ஏக்களும் அதிமுகவுடன் இணைந்துதான் ஆகவேண்டும்.

மனமாற்றம்

மனமாற்றம்

இது காலத்தின் கட்டாயம். மனமாற்றம் ஏற்படும் அனைவரையும் அரவணைத்துக் கொள்வதுதான் அதிமுகவின் வேலை என்றார் ஜெயக்குமார்.

English summary
Minister Jayakumar says that this regime is not retained by Sasikala. Dinkaran giving false statement on this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X