வலிமையான பெண்மணி ஜெயலலிதா.. அமிதாப் பச்சன் புகழஞ்சலி
ஜெயலலிதாவின் மறைவிற்கு ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஜெயலலிதா மிகவும் வலிமையான பெண்மணி என்று ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன் தினம் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. ஜெயலலிதாவின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
T 2463 - Deeply grieved at the passing of Jayalalita ji .. a strong woman ..
— Amitabh Bachchan (@SrBachchan) December 5, 2016
அந்த வகையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன், " ஜெயலலிதாஜி மறைவு எனக்கு ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
அவர் மிகவும் வலிமையான பெண்மணி. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய ஒரே மாநிலத்தின் தலைவர். மிகவும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.