For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெயலலிதா மரணம்.. விசாரணை கமிஷனில் ஆஜரானார் தீபக்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தீபக் ஆஜராகியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தீபக் ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு கட்சிகளும் சந்தேகம் தெரிவித்தன. இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் நேரில் விளக்கம் பெற்று வருகிறது. நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அவர் சென்னை எழிலகத்தில் உள்ள கலச மகால் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
Comments
English summary
Jayalalitha brother son Deepak appeared in the Aarumugasami inquire commission. Tamilnadu govt arranged Aarumugasami commission to inquire about Jayalalitha death.
Story first published: Thursday, December 14, 2017, 11:14 [IST]