For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வுக்கு எதிரான தீர்ப்பு... ‘சுண்டு விரலை’ வெட்டிக் கொண்ட திருப்பூர் அதிமுக தொண்டர்

Google Oneindia Tamil News

திருப்பூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டதை அறிந்த திருப்பூர் அதிமுக தொண்அர் ஒருவர் தனது சுண்டு விரலை வெட்டிக் கொண்டுள்ளார்.

கடந்த 18 வருடங்களாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா உள்பட குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஜெயலலிதாவைக் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இத்தீர்ப்பை அடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட பலப் போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடிக் காணப் பட்டன.

இதற்கிடையே நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சிலர் தீக்குளித்தனர். இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த அதிமுகத் தொண்டரான இரட்டை இலை பூபதி என்பவர் தனது சுண்டு விரலை வெட்டி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

English summary
After hearing the verdict of Jayalalitha case a ADMK person in Tirupur has cut his finger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X