அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஜெ.. டிடிவி தினகரன் புகழாரம்!
அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஜெயலலிதா என டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஜெயலலிதா என டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சசிகலாவின் அக்காள் மகனும் ஆர்கேநகர் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஜெயலலிதாவின் அடுத்த பிறந்த நாளுக்குள் தலை நிமிர்ந்த தமிழகத்தை அமைத்து காட்டுவோம் என டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார். அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் அஞ்சாத சிங்கமாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்றும் தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
துரோகிகளிடம் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் இருக்க வேண்டும் என்பதே டெல்லியின் விருப்பம் என்று டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். தலை நிமிர்ந்த தமிழகம், வளமான தமிழர் வாழ்வு என்ற ஜெயலலிதாவின் கொள்கையை உறுதி செய்வோம் என்றும் டிடிவி தினகரன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.