மருத்துவமனைக்கு செல்ல ஜெயலலிதா மறுத்து விட்டார்.. வீட்டிலேயே சிகிச்சையளித்தோம்.. சொல்கிறார் சசிகலா
ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார் என சசிகலா தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார் என சசிகலா தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷனில் 55 பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை சசிகலா தரப்பு தாக்கல் செய்துள்ளது. அதில் செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதாவுக்கு வீட்டில் என்ன நடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இரவு போயஸ் கார்டன் இல்லத்தில் முதல் தளத்தில் உள்ள பாத்ரூமில் தவறி விழுந்தார் என்றும், தான்தான் அவரை கைத்தாங்கலாக படுக்கைக்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
15 நிமிடங்களில் 2 ஆம்புலன்ஸ்
அப்போது ஜெயலலிதா மயங்கி விழுந்ததாகவும் சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதாவை சோதித்த மருத்துவர் சிவகுமார், அப்பல்லோ மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனை 15 நிமிடங்களுக்குள் இரண்டு ஆம்புலன்களை அனுப்பி வைத்ததாகவும் சசிகலா தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
எங்கே அழைத்து செல்கிறீர்கள்
ஆம்புலன்ஸில் சென்றபோது மயக்கம் தெளிந்த ஜெயலலிதா தன்னை எங்கே அழைத்து செல்கிறீர்கள் என்று கேட்டார் எனவும், மருத்துவமனைக்கு செல்வதாக தான் கூறியதாகவும் சசிகலா பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
காய்ச்சலால் பாதிப்பு
செப்டம்பர் மாதம் முழுவதும் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தார் என்றும் சக்கரை அளவு ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி காய்ச்சல் வந்ததாகவும் காய்ச்சலுடனேயே அவர் 21ஆம் தேதி நடைபெற்ற பொது விழாவில் பங்கேற்றார் என்றும் சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.
மருத்துவமனைக்கு செல்ல மறுப்பு
உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது மருத்துவமனைக்கு செல்ல ஜெயலலிதா மறுத்ததாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். வீட்டில் தவறி விழுந்ததற்கு 2 நாட்களுக்கு முன் ஜெயலலிதாவுக்கு 2 முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தனது பிரமாண பத்திரத்தில் சசிகலா தெரிவித்துள்ளார்.