For Daily Alerts
Just In
கட்சி பிளவுபட்டதால் களையிழந்த ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாள் விழா கட்சி பிளவுபட்டதால் களையிழந்த நிலையில் இருந்தது.
சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டபோதிலும் அது களையிழந்து காணப்பட்டது.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வந்த நிலையில் அவர் இறந்த பிறகு முதல் முறையாக விழா அவ்விழா கொண்டாடப்பட்டது. இதன் மூலம் மக்கள் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதை மதிப்பிட ஓபிஎஸ் அணி, சசி அணி ஆகியோர் கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி இன்று மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது அவரது பிறந்தநாளை தீபாவளி, பொங்கல் போல் தொண்டர்கள் விமரிசையாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில் அவரது இறப்புக்கு பிறகு, கட்சி பிளவுபட்டதைத் தொடர்ந்து அவரது பிறந்த நாள் விழா களையிழந்து காணப்பட்டது.
English summary
Jayalalitha's Birth Anniversary Celebrations are not attracting.
Story first published: Friday, February 24, 2017, 15:30 [IST]