For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் கைரேகை பெறும் போது அவருக்கு சுய நினைவே இல்லை... டாக்டர் சரவணன்

ஜெ. கைரேகையில் உயிரோட்டம் இல்லாததால் அதை பெறும் போது அவருக்கு சுயநினைவு இல்லை என்ற சந்தேகம் எழுவதாக திமுக மருத்துவர் அணி மாநில துணை தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதாவின் கைரேகை பெறும் போது அவருக்கு சுய நினைவே இல்லை...டாக்டர் சரவணன்..வீடியோ

    சென்னை: ஜெயலலிதாவின் கைரேகையில் உயிரோட்டம் இல்லை என்று திமுக மருத்துவர் அணி மாநில துணை தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நல குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நீண்ட காலம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் திருப்பரங்குன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

     Jayalalitha's finger print has no life, says DMK Doctor Saravanan

    இதைத் தொடர்ந்து அந்த தேர்தலில் ஏ.கே.போஸை வேட்பாளராக நிறுத்துவதற்கான வேட்புமனுவில் ஜெயலலிதாவிடம் இருந்து கைரேகை பெறப்பட்டது. இதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

    இந்நிலையில் ஜெயலலிதா 75 நாள்களுக்கு பிறகு மரணமடைந்துவிட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

    இதற்காக எழிலகத்தில் அவருக்கென அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளார். ஜெ.கைரேகை தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமியிடம் திமுக மருத்துவரணி மாநில துணைத் தலைவர் சரவணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

     Jayalalitha's finger print has no life, says DMK Doctor Saravanan

    இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பரங்குன்றம் அதிமுக வேட்புமனுவில் இருந்த ஜெ.கையெழுத்தில் உயிரோட்டம் இல்லை.ஜெயலலிதா கை ரேகை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை நாளை தாக்கல் செய்யவுள்ளோம்.

    ஜெ. சிகிச்சை குறித்த செய்திக் குறிப்புக்கும் மருத்துவமனை அறிக்கைக்கும் இருந்த முரண்பாட்டை தெரிவித்தோம். சுயநினைவோடு உள்ளவரின் கைரேகைகளில் எல்லா வளைவுகளும் என்ற வேறுபாட்டை அவருக்கு விளக்கினோம் என்றார் அவர்.

    English summary
    DMK Doctor Saravanan says that Jayalalitha's finger print has no alive. At the time of finger print has taken from her, she was unconsious.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X