For Daily Alerts
Just In
2016 செப். 22ம் தேதி இரவு ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? டிவி சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ஆம் தேதி நடந்தது என்ன என்பது குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது நடந்தது என்ன என்பது குறித்து புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு கிடைத்த பிரத்யேக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு தொடர்பாக ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது நடந்தது என்ன என்பது குறித்தும் நோயாளியை பற்றிய அப்பல்லோ குறிப்புகளும் புதிய தலைமுறையின் களஆய்வில் கிடைத்துள்ளது.
Recommended Video
ஜெ., மரணம்: 3 மாதத்தில் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு-வீடியோ
அதன்படி 2016 செப்.22ம் தேதி இரவு 10 மணிக்கு போயஸ் இல்லத்திலிருந்து அப்பல்லோவுக்கு போன் அழைப்பு சென்றது. 10.01 மணிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனையில் இருந்து கிளம்பியது.
10.06 மணிக்கு போயஸ் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றது. 10.15 மணிக்கு கிளம்பிய ஆம்புலன்ஸ் 10.20 மணிக்கு அப்பல்லோ சென்றது. 10.25 மணிக்கு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
English summary
What happened when Jayalalitha admitted on Sep 22, 2016? A detailed patient care report released.
Story first published: Thursday, September 28, 2017, 10:31 [IST]