For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதலே ஜெ. கவலைக்கிடமாகதான் இருந்துள்ளார்.. எய்ம்ஸ் டாக்டர்கள் திடுக்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதலே ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாகதான் இருந்துள்ளது என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதலே ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாகதான் இருந்துள்ளது என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது.

இந்த கமிஷன் ஜெயலலிதா தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. இதுவரை 80க்கும் மேற்பட்டோரிம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணை கமிஷன் சம்மன்

விசாரணை கமிஷன் சம்மன்

இந்நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை அளிக்க வந்த டெல்லி எய்மஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோர் நேற்று ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

முதல் நாளில் இருந்தே கவலைக்கிடம்

முதல் நாளில் இருந்தே கவலைக்கிடம்

அதன்படி நேற்று காலை அவர்கள் விசாரணை கமிஷனில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதில், ஜெயலலிதா அப்பலோவில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து கவலைக்கிடமாகவே இருந்துள்ளார்.

சிகிச்சை அளிக்கவில்லை

சிகிச்சை அளிக்கவில்லை

இதனை மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை.

எய்ம்ஸ் மருத்துவர்கள் வாக்குமூலம்

எய்ம்ஸ் மருத்துவர்கள் வாக்குமூலம்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டோம். என எய்ம்ஸ் மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

English summary
AIMS doctors appears in Arumugasamy commission regarding jayalalitha death. They said we did not give any treatment to Jayalalitha. Jayalalitha was critical from the day one AIMS doctors said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X