ஜெயலலிதா மரணம் தொடர்பான முதற்கட்ட விசாரணை நாளை தொடங்குகிறது
ஜெயலலிதா மரணம் தொடர்பான முதற்கட்ட விசாரணை நாளை தொடங்கும் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான முதற்கட்ட விசாரணை நாளை தொடங்கும் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணனிடம் நாளை விசாரணை நடக்கும் எனவும் விசாரணை ஆணையம் கூறியுள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார்.
அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் இருந்ததால் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் உள்பட 8 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 70க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன என்று விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்த பாத்திரங்கள் மீதி நாளை முதல் ஆறுமுகசாமி ஆணைக்குழு விசாரணையை தொடங்குகிறது. மருத்துவர் சரவணனிடம் நாளை விசாரணை நடக்கும் எனவும் விசாரணை ஆணையம் கூறியுள்ளது. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மற்றவர்களும் விரைவில் விசாரிக்கப்படுவார்கள் என்று விசாரணை ஆணையம் கூறியிருக்கிறது.