For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டு கதறி அழுத ஓபிஎஸ்- வைரல் வீடியோ

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ராஜாஜி அரங்கில் அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுத காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உடல்நலக்குறைவினால் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்திய போது பணிவு காணமல் போய்விட்டதாக பலரும் குற்றம் சாட்டினர்.

ஊடகங்களிலும் செய்தி வெளியானது. சமூக வலைதளங்களிலும் பலரும் பதிவிட்டனர். பதவியேற்ற போது பலரும் கண் கலங்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

Jayalalithaa Death: Panneerselvam Cries - Viral Video

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் முதன் முதலாக மலர்வளையம் வைத்து ஜெயலலிதாவின் பாதத்தில் குனிந்து அஞ்சலி செலுத்திய போது கதறி அழுத காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும்,சசிகலா நடராஜன் அதிமுக தலைமைப் பொறுப்புக்கு வருவதை விரும்பாத அதிமுக தொண்டர்களும் இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். இவர்தான் உண்மையான விசுவாசி என்று கூறி வருகின்றனர். ஓபிஎஸ் அழுவதைப் பார்த்து பிற அமைச்சர்களும் கண் கலங்கி அமர்ந்துள்ள வீடியோ காட்சி தற்போது வெளியாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த வீடியோ வெளியாகவில்லை.

அதே நேரத்தில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகள், ஓ.பன்னீர் செல்வத்தின் அழுகையையும், விசுவாசத்தையும் திட்டமிட்டு மறைத்து விட்டதா?

English summary
TamilNadu Chief Minister O.Paneerselvam cried for Jayalalithaa funeral day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X