அப்பல்லோவில் ஜெயலலிதாவை நேரில் பார்த்தேன்- டிரைவர் கண்ணன்
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்த்ததாக டிரைவர் கண்ணன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்த போது நேரில் பார்த்தேன் என்று ஜெ.வின் கார் டிரைவர் கண்ணன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.
அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
விசாரணை கமிஷன்
சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள விசாரணைக் கமிஷனில் தினமும் விசாரணை நடந்துவருகிறது. முன்னாள் இந்நாள் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என அவரின் மரணத்தில் தொடர்புடைய அனைவரும் ஆஜராகி விளக்கம் அளித்துவருகின்றனர்.
விளக்கம் அளித்த டிரைவர்
கடந்த மாதம் ஜெயலலிதா வீட்டு சமையல்காரர் ராஜம்மாள் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், அவரது கார் டிரைவராக இருந்த ஐயப்பன் அதே நாளில் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். ஆறுமுகசாமி முன்பு ஆஜரான அவர், நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமாக பதில் அளித்தார். அவரது வாக்கு மூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டது.
ஜெயலலிதாவை பார்த்தேன்
இந்த நிலையில் மற்றொரு கார் டிரைவர் கண்ணன் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5வது நாள் ஜெயலலிதாவை பார்த்ததாக கண்ணன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காரில் சென்றேன்
செய்தியாளர்களிடம் பேசிய கண்ணன் செப்டம்பர் 22ஆம் தேதியன்று ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது காரில் பின்னால் சென்றதாகவும் கூறினார். 1991ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவிடம் ஓட்டுநராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.